Tuesday, December 20, 2005

ஊடகங்களும் சொந்த அரிப்புகளும்.

42 பேரின் உயிரைக் காவுவாங்கிய செய்தியை அவரவரின் ஆதரவு ஊடகங்கள் திரித்த செய்தியை வெளியிட்டு மய்யமாக மக்களை முட்டாளாக்கிக்கொண்டிருக்கின்றது.
வெளியில் இருந்தே கையெழுத்துப்போட்டு ஜனநாயகக் கடமையாற்றுபவர், ஒருவரின் மேல் பழியைப் போடுகிறார், அரசால்பவர் விஷமிகளே காரணம் என கூறுகின்றார்.
ஒரு சில விஷமிகளால் அரசு/மக்களுக்கு தீமை விளைவிக்க முடியுமென்றால். என்ன அரசு இது?

Wednesday, December 14, 2005

தாயுமானவர்.

1986ம் ஆண்டு எனது தாயார் இறந்தபோது, பெரும்பாலான உறவினர்கள் என் அப்பாவை மறுமணம் செய்யச்சொல்லி வற்புறுத்தினர்.எனது தாயார் நினைவாகவே வாழ விரும்பி கடைசிவரை எங்களுக்கு உறுதுனையாய் இருந்து எங்களை கரை சேர்த்து பிறகு கண்மூடின என் அப்பாவின் நினைவு நாள் இன்று...
இன்றோடு 5 வருடங்கள் ஆகின்றன. எங்களுக்கு தந்தையாய் இருந்து, தாயுமாகி நின்ற அவரை, எங்கள் சிந்தையில் நிறுத்தி கண்ணீரோடு நினைவு கூர்கிறோம் .